Posts

Showing posts from January, 2025

முதல் நாள் நடை - சரண்யா

Image
நடைப்பயணம் ஒவ்வொரு நாளையும் குறித்து தொடர்ச்சியாக  munai.in  வலைப்பதிவில் சிபி பதிவேற்றி வருகிறார். என்னதான் ஒரே பயணமாக ஒன்றாக நடந்தாலும், ஒவ்வொருவருக்கும் அந்த பயணம் அளிப்பது வேறு தான். அதனால் தான் எல்லோரையும் எழுதும்படி வலியுறுத்தியும் வருகிறேன்.  நெடுநாட்கள் நீண்ட தூர நடைப்பயணம் குறித்த ஆசை இருந்தது. 2018 இல் Forrest Gump திரைப்படம் பார்த்தது முதல். அதுவே, இந்த பயணத்தில் நான் கலந்து கொண்டதன் நோக்கம்,  திறந்த வானின் கீழ் வெகு நேரம் இருக்கும் வாய்ப்பும், அது அகத்திற்கு என்ன அளிக்கும் என்பது தான். அறம் கல்வி மாணவர்கள் மீது பெரும் மதிப்பு உண்டு. பெருந்தலையூரில் அவர்கள் வாக்குக்கு கை நீட்டாதீர்கள் என்ற கோரிக்கையை முன் வைத்து வெற்றி கண்டதின் அனுபவம் குறித்து பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதை தலைமை ஏற்று நடத்திய அனு ஶ்ரீ இந்த பயணத்தில் இணைந்திருக்கிறார். நடைப்பயணம் முழுதாக செல்வதா பாதி செல்வதா என்று எல்லா சாத்தியக்கூறுகளையும் அலசி ஆராய்ந்து கடைசியில் சனிக்கிழமை முதல் ஐந்து நாள் பொங்கல் விடுமுறையில் செல்லலாம் என்ற முடிவு எடுத்திருந்தேன். வீட்டில் நடைப்ப...

பதினொன்றாம் நாள்

Image
பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து காலை எழுந்து கிளம்பியவுடன் மீண்டும் அந்த ஐம்பது மீட்டரை நடந்து தலைவர் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து நாங்கள் யார், எதற்கு வந்துள்ளோம் என்றெல்லாம் சொன்னோம். அவர் முகத்தின் எந்த சதையும் ஒரு அசைவையும் ஏற்படுத்தாமல் கண் கீழே குவிந்து திறன் பேசியை பார்த்துக் கொண்டு இருந்தது. அவர் வெறுமனே தலையை மட்டும் அசைத்து, "ம்" என்ற சத்தத்தை எழுப்பிக் கொண்டு இருந்தார். நாங்கள் சொல்வதை பாதியில் நிறுத்திவிட்டு நன்றியை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டோம்.  சிவராஜ் அண்ணா சொல்லி வடிவமைத்து அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை சிவகுரு நாதரின் தம்பி பாலு பேருந்தில் வைத்து அனுப்பி அதை உமையாள் அவர்களின் கணவர் தேனப்பன் திண்டுக்கல் சென்று பெற்றுக் கொண்டு வந்து நேற்று இரவு எங்களிடம் கொடுத்திருந்தார். அவற்றை தீர்த்தாக வேண்டும் என்று வெறிகொண்டு அங்கிருந்து மக்களுக்கு கொடுத்துக் கடந்து சென்றோம். இரவு கடும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திக் கொண்டு இருந்த சாலையும் அதன் இரண்டு புறமும் விரிந்து சூழ்ந்திருந்த மரங்களும் காலை நடக்கும் போது ரம்யமான ஒன்றாக தெரிந்தது. இயற்கை எங்களை வரவே...

பத்தாம் நாள்

பயணங்களில் நண்பர்களை தேர்ந்தெடுப்பது அந்த பயணத்தை செழுமையாக்குவதில் மிக முக்கியமான பங்கு. எனக்கு தற்போது இருக்கும் நண்பர்களில் சிறந்தவர்கள் தான் என்னுடன் இந்த பயணத்திற்கு வந்துள்ளார்கள். ஆனாலும் அவர்கள் இன்னொருவர்கள். வேறு ரசனை கொண்டவர்கள். வேறு பார்வை கொண்டவர்கள். வேறு எல்லைகள் கொண்டவர்கள். என்னுடன் முரண்கள் கொண்டவர்கள். எவ்வளவு குறைவான முரண்களை கொண்டுள்ளோமோ அவ்வளவு இணக்கமானவர் என்று சொல்லிக் கொள்ளலாம். அப்படி இந்த குழுவில்‌ எனக்கு இணக்கமானவன் கௌதம். பெரும்பாலும் இந்த பயணம் முழுக்க நாங்கள் தனித்தனியாகவே நடந்து வந்தோம். ஆனால் ஒன்றாக இருந்த பொழுதுகளில் வெடித்து சிரித்துக் கொண்டும், சில நேரங்களில் ஆழமான எதாவது ஒன்றை பற்றி பேசிக் கொண்டும் இருப்போம். அனைவருமே எனக்கு நெருக்கமானவர்கள், அன்பிற்குரியவர்கள்,‌ மகிழ்ச்சிக்குரியவர்கள். அனைவரிடத்திலும் மகிழ்வாகத்தான் இருப்பேன். ஆனால் கௌதம், நான் அவதானிக்காத சிலவற்றை அவதானித்து சொல்லிவிடுவான். கூர்மையான அவதானிப்புகள் அவனிடம் உள்ளன. புதியதை தேடி செல்லும் எண்ணமும் ஆர்வமும் அவனுக்கு இருக்கும். நிலப்பரப்புகளை உன்னிப்பாக கவனிப்பான். சில இடங்களில் என்னைவி...