Posts

பதினேழாம் நாள்

Image
துவரங்குறிச்சியில் பாலு என்பர் வீட்டில் தங்கி இருந்தோம். கடைசி நாள் நடக்க வேண்டிய தூரத்தை குறைத்தால் நிறைவு விழாவில் பங்கேற்பது எளிதாக இருக்கும் என்று இன்று கூடுதல் கிலோமீட்டர் நடப்பதாக திட்டம். அதனால் இயன்றவரை சீக்கிரம் கிளம்பலாம் என்று தயாராகிவிட்டோம். அப்போது ஒருவர் இங்கு ஒரு காந்தி சிலை உள்ளது அதற்கு மாலை அணிவித்து விட்டு பயணத்தை தொடங்குங்கள் என்று கேட்டுக் கொண்டார். நாங்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்து முக்கிய சாலையில் இருந்த அந்த காந்தி சிலை இருக்குமிடத்திற்கு சென்றோம். சிமின்டால் செய்யப்பட்டு மெழுகு பூசப்பட்டது போன்ற சிலை. அதில் அடிக்கப்பட்டு இருந்த பெயிண்ட் மங்கிப் போய் இருந்தது. அந்த சிலையின் முன் எங்களை நிற்க வைத்து, திடீரென ஒருவரை திறன்பேசியில் கேமராவை வைக்க சொல்லி எங்களை கூட்டி வந்தவர் பேசத்தொடங்கி விட்டார். அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். எங்களை காங்கிரஸ் கட்சி சார்பாக வரவேற்கும் படியாக இருந்தது அவரின் பேச்சு. எனக்கு இந்த அமைப்பின் மீது ஒரு கட்சி சாயல் வந்து விடுமோ என்று அச்சம் மேலெழுந்த படியே இருந்தது. அவர் பேசி முடித்த உடனே உங்கள் கட்சி சார்பாக நாங்கள் இந்த நடைபயணத்தை ...

ஐந்தாம் நாள் - சரண்யா

Image
 காலை எழுந்தது முதலே, எப்படியாவது அன்று நூறாவது கி.மீ நடந்து விட வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கு மேலோங்கி இருந்தது. ஏற்கனவே 75 கி.மீ நடந்து விட்டிருந்த நிலையில் கள்ளிமந்தையம் வரை நடந்தால், திட்டத்தின் படி நூறாவது கி.மீ நடந்ததாகிவிடும்.   இத்தனை நாட்களும் வீடு, அலுவலகம், அன்றாடம் எல்லாம் நினைவில் கூட இல்லாமல் எங்கோ தொலைவில் நிகழ்ந்தவைப் போல இருந்தன. குழுவில் எல்லோருடனும் இணக்கம் மேலும் அதிகரித்து இருந்தது. மீண்டும் பள்ளி கல்லூரி காலத்திற்கு திரும்பிய உணர்வில் இருந்தேன். இந்த செயல்பாட்டில் முழுதாக பயணிக்க முடியாமல் விடை பெற்றுக் கொள்வது எனக்கு வருத்தம் அளித்தது. இந்த மனநிலையில் 100 என்பது ஆறுதலான ஒரு முழுமை. அருள் ஜோதி ஆசிரமத்தில் பழனி யாத்திரிகள் அதிகாலையில் இருந்தே கிளம்பத் தொடங்கி இருந்தனர். நான்கு மணி முதல் சத்தம் கேட்டபடி இருந்தது. இவற்றுக்கு அப்பால் ஆசிரமத்தின் பின்னால் அமைதியாக ஒரு தியான மண்டபம் இருந்தது. வள்ளலார் படத்துடன் ஒரு கண்ணாடி குடுவை மூடிய விளக்கு. அங்கு சென்று பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.  பழனி யாத்ரிகளிடம் எங்களைக் குறித்து சொன்னால் பொரு...

முனை அமைப்பு பற்றி

Image
 முனை இளைஞர் இயக்கம்  முனை இளைஞர் இயக்கம் என்பது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் 2023 – 2024 காலத்தில் ஈரோடு மற்றும் திருப்பூரில் நடத்திய அறம் மற்றும் கற்பனைக் கல்வி பயின்ற கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்டது. இது அரசியல் மதசார்பற்ற அமைப்பாகும்.  அறக்கல்வி குறித்து அறிய:  https://ethicaleducationtamil.blogspot.com/ தலைவர்: சிபி , 135, கோல்டன் சிட்டி, சிறுவலூர், கோபி, ஈரோடு, 638 054. கல்வி: BBA completed on April 2024,  Gobi arts and science college.  அழைப்பு எண்: 63835 69741.  மெயில்: mailtosibi19@gmail.com துணை தலைவர்: மெய்யரசு க.ச, 374/1,மருத்துவமனை ரோடு, கவுந்தப்பாடி, ஈரோடு கல்வி: Bsc.Cs.  completed on April 2024,  Gobi arts and science college.  செயலாளர்: அருள்ஜோதி , 8/55 வடக்கு தோட்டம் , வாணிப்புதூர் , ஈரோடு. 638 506.  கல்வி:  Ist year MCA, Gobi arts and science college.  துணை செயலாளர்: மேகவர்ஷினி. த 1/144, அண்ணா நகர் ,  கணக்கம்பாளையம், கோபி, ஈரோடு, 638 505.  கல்வி:  Ist year MCA, Gobi arts and s...