விருதாளர் குருசாமி நேர்காணல்
குருசாமி நேர்காணல் குருசாமி அத்தானியில் மின்வாரியத் துறையில் ஃபோர்மேனாக பணி புரிந்து வருகிறார். இதற்கு முன் நம்பியூர் போன்ற வெவ்வேறு பகுதிகளில் பணிபுரிந்து உள்ளார். தற்போது கோபி அருகே வெள்ளாளபாளையம் என்னும் ஊரில் வசிக்கிறார். லைன் மேனாக பணியை தொடங்கிய இவர் தொடக்க காலத்தில் அலுவலக செலவுகளுக்காக எதிர்கொண்ட நெருக்கடிகளையும் அதை சமாளிக்க நேர்ந்த சறுக்கல்களையும் இந்த பேட்டியில குறிப்பிட்டு உள்ளார். குருசாமியுடன் முனை அமைப்பினர் 1.நேர்மையாக இருப்பவர்களின் பெரும் அகத் தடை என்பது என்ன? எனக்கு கர்வமாக தான் உள்ளது. நான் அடிப்படையிலேயே நேர்மையானவன். கடந்த கால சூழலே நான் இவ்வாறு இருப்பதற்கு காரணம்.இதை நான் விரும்பி ஏற்றுக்கொண்டேன். 2. நேர்மையாக இருப்பவர்களின் பெரும் புறத் தடை என்பது என்ன? ஊரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் நான் தனித்து நிற்பதால் சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நான் வேறு அரசு அலுவலகமோ அல்லது கடைகளுக்கோ சென்றால் என்னை வேகமாக தாட்டியுட வேண்டும் என்று நினைப்பார்கள். அதை எல்லாம் கடந்து போக வேண்டும். தவறான செயல்களை என்னை செய...